Thursday 18 July 2013

தேர்வு ஏற்பாடுகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் ‘தந்தி’ டி.வி.க்கு நேற்று சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
குரூப்–4 தேர்வுக்கு 16 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதற்கான எழுத்துத்தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 21–ந் தேதி நடைபெற உள்ளது. தேர்வு, வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடத்தப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
பதற்றம் நிறைந்த தேர்வு மையங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கு தேர்வு நடைபெறுவது அனைத்தும் வீடியோவில் பதிவுசெய்யப்படும். அந்த வீடியோ காட்சியை சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment